செய்திகள்,திரையுலகம் படபிடிப்புக்கு சென்ற இடத்தில் ஹனிமூன் அறையில் காத்ரீனா கைப்புடன் தங்கிய நடிகர்!…

படபிடிப்புக்கு சென்ற இடத்தில் ஹனிமூன் அறையில் காத்ரீனா கைப்புடன் தங்கிய நடிகர்!…

படபிடிப்புக்கு சென்ற இடத்தில் ஹனிமூன் அறையில் காத்ரீனா கைப்புடன் தங்கிய நடிகர்!… post thumbnail image
மும்பை:-காத்ரீனா கைப் மற்றும் ரன்பீர் கபூர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜக்கா ஜாசூஸ் என்ற படத்தின் படபிடிப்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன், பிக்ஸ்பர்க், ஜோகன்ஸ் பர்க் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பிக்ஸ்பர்க் நகரில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்களுக்காக புக் செய்யப்பட்ட நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினர் இரவில் தங்குவதற்காக சென்றனர். அப்போது காத்ரீனா கைப் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய இருவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த அறைகளை தென்னாப்பிரிக்க வி.ஐ.பிக்கள் இருவருக்கு திடீரென ஒதுக்கவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாகவும், எனவே அவர்கள் இருவருக்கும் வேறு அறைகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஓட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஓட்டல் நிர்வாகிகள் இருவருக்கும் ஏற்பாடு செய்த அறை திருமணமாகி இளஞ்ஜோடிகள் தங்கும் ஆடம்பரமான ஹனிமூன் அறை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, நாங்கள் இருவரும் இதே அறையில் தங்கிக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். படப்பிடிப்புக்கு சென்ற இந்த ஜோடி, ஹனிமூன் அறையில் தங்கிய விஷயம் பாலிவுட்டில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி