சாப்ராடெல்லி-திப்ருகர்க் இடையே பீகார் வழியாக செல்லும் அதிவேக சொகுசு ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் சாப்ரா ரெயில் நிலையத்தை:- விட்டு புறப்பட்ட பின் தடம் புரண்டது.
முதற் கட்ட தகவலின்படி 8 பயணிகள் ரெயில் பெட்டிகளும், உணவகம் உள்ள பெட்டி ஒன்றும் தடம் புரண்டதாக தெரியவந்துள்ளது. சாப்ராவிற்கு 11 கி.மீ தொலைவில் உள்ள கோல்டின்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.விபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி