அரசியல்,செய்திகள் நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்…!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்…!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்…! post thumbnail image

நைஜர்:-

வன்முறையும், தீவிரவாதமும் தலைவிரித்தாடும் நைஜீரியாவின் கிராமங்களுக்குள் வசிக்கும் இரு பெரிய மதங்களுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு நைஜீரியாவின் கடுன்யா மாவட்டத்தில் உள்ள ஃபடான் கர்ஷி என்ற கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள், காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப் போல் 21 பேரை கொன்று சாய்த்தனர்.

அதே மாவட்டத்தில் உள்ள நன்டூ கிராமத்தையும் சூறையாடிய இந்த கும்பல், அங்கும் 17 பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றது. இரு கிராமங்களை சேர்ந்த பலர் குண்டு துளைத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பலியான அப்பாவி மக்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரிகள், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றும் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி