இதனிடையே முருகதாஸ் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் இந்தி உரிமையையும் வாங்கி, அதில் முருகதாஸ் இயக்கத்திலேயே நடிக்க வேண்டும் என்று அக்ஷய் முடிவெடுத்துள்ளாராம். அதோடு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பிரபு தேவா இயக்கத்தில், வெற்றிப் படத்தில் நடித்தவர்.
இப்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் வெற்றிப் படத்தில் நடித்துள்ளதால் தமிழ் இயக்குனர்களின் மீதும், தமிழ்ப் படங்களின் மீதும் மிகுந்த மரியாதை வந்து விட்டதாம். படப்பிடிப்பின் போதே முருகதாசிடம் அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விரைவில் அக்ஷய் குமார் தமிழ்ப் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி