செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை தோல்வி காரணமாக ஸ்பெயின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து?…

உலக கோப்பை தோல்வி காரணமாக ஸ்பெயின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து?…

உலக கோப்பை தோல்வி காரணமாக ஸ்பெயின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து?… post thumbnail image
பிரேசில்:-2010ம் ஆண்டு உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம் பிடித்த வீரர்களில் பெரும்பாலானோர் அப்படியே இந்த முறையும் வாய்ப்பு பெற்றனர். அனுபவம் என்கிற வகையில் அவர்களின் தயவு அவசியம் என்ற போதிலும், களத்தில் புது ரத்தமும் தேவை என்பதை மறந்து விட்டார்கள்.பொதுவாக ஸ்பெயின் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கைதேர்ந்தவர்கள். அது மட்டுமின்றி பந்து அதிக நேரம் தங்கள் வசமே வலம் வர, குறுந்தூரத்துக்கு அடிக்கடி தங்களுக்குள்ளேயே பந்தை ‘பாஸ்’ செய்வார்கள். ஸ்பெயினின் பிரபலமான இந்த அணுகுமுறைக்கு ‘டிக்கி டக்கா’ என்று பெயர்.

ஆனால் இது போன்ற யுக்திகள் எல்லாம் இந்த முறை புஷ்வாணமாகி போய் விட்டது. இரு ஆட்டங்களில் 7 கோல்களை விட்டுக்கொடுத்து விட்டனர். உலக கோப்பை படுதோல்வி எதிரொலியாக ஸ்பெயின் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்பெயின் பயிற்சியாளர் 63 வயதான வின்சென்ட் டெல் போஸ்க்யூ தனது எதிர்காலம் கேள்விகுறி தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். 156 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்பெயின் கேப்டன் கேசில்லாஸ் மற்றும் டேவிட் வில்லா, ஷேவி ஹெர்னாண்டஸ் உள்ளிட்டோர் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம்.
வின்சென்ட் டெல் போஸ்க்யூ கூறுகையில், ‘உலக கோப்பை போட்டியிலோ அல்லது முக்கியமான போட்டிகளிலோ இது போன்ற எதிர்மறையான முடிவுகள் கிடைக்கும் போது, அடுத்து அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

பொதுவாக இது நடப்பது வழக்கமானது தான். ஆனால் எனது எதிர்காலம் குறித்து இப்போது சிந்திக்க விரும்பவில்லை. அது பற்றியும், அணி குறித்தும் அலசி ஆராய நேரம் தேவை. அதற்கு இது சரியான நேரம் அல்ல. ஸ்பெயின் கால்பந்து அணியின் வளமான எதிர்காலத்திற்கு என்ன தேவை மற்றும் எனது நிலை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்வோம்.’ என்றார்.சிலிக்கு எதிரான ஆட்டம் குறித்து பேசிய வின்சென்ட் டெல் போஸ்க்யூ, ‘எங்கள் வீரர்கள் மிகவும் மந்தமாக ஆடி விட்டனர். அது மட்டுமின்றி முதல் பாதியில் ரொம்ப அச்சத்துடன் விளையாடினர். இது தான் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.இந்த உலக கோப்பையில் முதல் சுற்றுடன் ‘அவுட்’ ஆவோம் என்று ஒரு போதும் நினைக்கவில்லை’ என்றார். எங்களில் சில வீரர்களுக்கு வயது 30–ஐ கடந்து விட்டது. அவர்களின் பொன்மயமான தருணங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக 33 வயதான ஸ்பெயின் கேப்டன் கேசில்லாஸ் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி