அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!… post thumbnail image
புதுக்கோட்டை:-நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், யூனிஸ்கான், புஷ்பராஜ், சக்தி, சத்தியன் உள்பட 6 பேருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 24 மீனவர்கள் நேற்று மாலை இந்திய கடல் எல்லையான கோடியக்கரை அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதிலிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இந்த பகுதிக்கு மீன்பிடிக்க உங்களுக்கு என்ன தைரியம், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் என்ன தண்டனை தெரியுமா? என்று கேட்டு மிரட்டியதோடு ஆபாச வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.உடனே புதுக்கோட்டை மீனவர்கள் தங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் மீண்டும் மறித்த இலங்கை கடற்படையினர் 6 படகுகளுடன் 24 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் பறித்து கொண்டனர்.

பின்னர் மீனவர்கள் 24 பேரையும் இலங்கையில் உள்ள நெடுந்தீவு முகாமிற்கு அழைத்து சென்றனர். இன்று காலை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப் படுவார்களா என்ற விபரம் தெரியவரும்.மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி