செய்திகள் ஆபாச வலைத்தள நிறுவனருக்கு 30 ஆண்டு சிறை!…

ஆபாச வலைத்தள நிறுவனருக்கு 30 ஆண்டு சிறை!…

ஆபாச வலைத்தள நிறுவனருக்கு 30 ஆண்டு சிறை!… post thumbnail image
நியூயார்க்:-சிறுவர்- சிறுமியரை உடலுறவில் ஈடுபடுத்தி, உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 600 பேர் ஒளிப்பதிவு செய்து, புழக்கத்தில் விட்ட ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்களை உக்ரைன் நாட்டை சேர்ந்த மேக்சிம் ஷிங்காரென்க்கோ என்பவன் தனக்கு சொந்தமான இணையத்தின் மூலம் உலகெங்கும் பரவ விட்டான்.

இது தொடர்பாக பிடிபட்ட சிலர் அளித்த தகவலின் பேரில் இவன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இவன் மீது கடந்த 18 மாதங்களாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்துவதாக கோர்ட்டில் தெரிவித்த குற்றவாளி மேக்சிம் ஷிங்காரென்க்கோ வுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி