செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…

படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…

படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!… post thumbnail image
சென்னை:-நடிகை பிரியங்கா ‘கங்காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘லாரா’ ‘கோடை மழை’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் களஞ்சியம் போலீஸாக நடித்துவரும் ‘கோடை மழை’ படம் அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் ஆகும்.

படத்தில் களஞ்சியத்தின தங்கையாக நடிகை பிரியங்கா நடித்து வருகிறார். இவர்கள் இருவர சம்பந்தப்பட்ட பட காட்சி சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் படமாக்கப்பட்டது.படத்தின் கதைப்படி, பிரியங்கா ஒரு இளைஞரை காதலிக்கிறார். அந்த காதல், களஞ்சியத்துக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுடுகிறது. அப்போது களஞ்சியம் கோபத்துடன் பிரியங்காவின் கன்னத்தில் அறைவது போலவும் ஒரு காட்சி எடுக்கப்பட இருந்தது.இதற்காக பிரியங்காவும், களஞ்சியமும் மூன்று முறை ஒத்திகை பார்த்தார்கள். அப்போது களஞ்சியம் ஓங்கி அறையும்போது, பிரியங்கா கன்னத்தை திருப்பிக்கொண்டார். இதனை தொடர்ந்து டேக் செல்லப்பட்டு படத்தின் காட்சியை திரைப்படமாக்கும் போது களஞ்சியம் கன்னத்தில் அறைய முயன்ற போது பிரியங்கா கன்னத்தை திரும்ப தவறி விட்டார். இதனால் நிஜமாகவே அவரது கன்னத்தில் அறை விழுந்தது.

இதனை சற்றும்எதிர்பாராத பிரியங்கா மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட களஞ்சியம் அதிர்ச்சி அடைந்தார் படப்பிடிப்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிரியங்காவை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபின், மயக்கம் தெளிந்து கண் விழித்தார். ஆனால், காதுக்குள் “கொய்ங்’ என்று சத்தம் வருவதாக தெரிவித்தையடுத்து உடனே காது மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார். பிரியங்கா தொடர்ந்து மருத்துவமனையில் கிச்சை பெற்று வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி