செய்திகள்,பொருளாதாரம் சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…

சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…

சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!… post thumbnail image
பீஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று மாநில ஊடகங்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளன.

இந்த செய்தியை உறுதிப்படுத்திய ஹென்ங்யாங் நகரின் பெண் காவலர், பொதுமக்கள் யாருக்கும் இதில் காயமேற்படவில்லை என்றார். ஹென்ங்யாங் நகரின் புறநகர்ப் பிரிவில் உள்ள கிராமக் குடியிருப்பில் இந்த ஆயுத சேமிப்புக் கிடங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.உலகிலேயே பெரிய ராணுவப் படை சீனாவுடையது ஆகும். இதில் 2.3 மில்லியன் உறுப்பினர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ராணுவத்திற்காக அங்கு அதிக அளவில் செலவிடப்படுவதால் வீரர்களின் வாழ்க்கை முறைகளும், ஆயுதங்களின் தரங்களும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருந்தபோதிலும், மிகப் பெரிய நிலப்பரப்பில் விரிந்து கிடக்கும் படைப் பிரிவால் அவற்றை மேற்பார்வையிடுவது என்பது தளர்வாகவே உள்ளது என்று கூறப்படுகின்றது.

மேலும், சீன ராணுவத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாமல் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். இங்கு நடைபெறும் வெடி விபத்துகள், விமான விபத்துகள் போன்ற அனைத்தின் விபரங்களும் அரசால் கட்டுப்படுத்தப்படும்.நேற்று நடந்த சம்பவமும் ஒரு விபத்து என்றே அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடமேற்கு பகுதியில் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சீன பாதுகாப்பு படைகள் சமீப காலமாக அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி