அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியை காண பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் அழைப்பை ஏற்றுக் கொண்டாரா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

பிரேசில் நாட்டில் உலகக் கோப்பைக் கால்பந்து தொடர், தொடங்கிய நிலையில் இந்திய அஞ்சல்துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.உலக கோப்பை கால்பந்து போட்டி நினைவு தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். 2014-ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை சிறப்பு தபால் தலையை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பின்னர் பேசிய பிரதமர், குழந்தைகளின் வளர்ச்சிக்கு விளையாட்டு இன்றியமையாத ஒரு அங்கம் என்றும், விளையாட்டின் அவசியத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி