செய்திகள் 15 வயது மாணவியை பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடம் சிறைத்தண்டனை!…

15 வயது மாணவியை பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடம் சிறைத்தண்டனை!…

15 வயது மாணவியை பலாத்காரம் செய்த 6 மாணவர்களுக்கு 1600 வருடம் சிறைத்தண்டனை!… post thumbnail image
டெக்சாஸ்:-அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான மெக்லெனன் என்ற பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பள்ளியிலேயே படிக்கும் டகளஸ் டேமண்ட் கனடா(வயது 19) டேஜூனோஸ்கெய டிகிரேட் (18) ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மாணவியுடன் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி தங்களது இருப்பிடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு டேமண்ட் கனடாவின் 4 நண்பர்கள் இருந்தனர். அவர்கள் டேவோரிக் ஜாவோன் இவன்ஸ் (20) லேமோண்ட் டிராய் டேவிஸ்(19) டேடிரவுன் டேரல் சுமித்(18),கோரி டெர்னல் ஹால் (18) .விபரீதத்தை உணர்ந்த மாணவி உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை அந்த ஆறுமாணவர்களும் வலுக்கட்டாயமாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்ன மாணவிக்கு 5 டாலர் பணம் கொடுத்து பள்ளிக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

மாணவி நடந்த சம்பவத்தை அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறினார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று 6 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஆறு நபர்களுக்கு சேர்த்து 1600 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி