அரசியல்,செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…

விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…

விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!… post thumbnail image
பனாஜி:-ரஷ்யாவிடமிருந்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கோவா அருகே அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விக்ரமாதித்யா போர்க்கப்பலுக்கு சென்ற மோடி, அங்குள்ள மிக் 29கே போர் விமானத்தில் ஏறி காக்பிட் பகுதியில் அமர்ந்தார். பின்னர் ஊழியர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார்.

பின்னர் அதிகாரிகளிடையே பேசிய மோடி, பாதுகாப்பு உபகரணங்களை தன்னிறைவுக்காகவே இறக்குமதி செய்யப்படுவதாகவும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி