செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…

நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…

நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!… post thumbnail image
புதுடெல்லி:-மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு தந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி