செய்திகள்,திரையுலகம் சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…

சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…

சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படம் சமீபத்தில் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து டுவிட்டரில் சிம்பு கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடியாக டி.வி.யொன்றில் சௌந்தர்யா பேட்டி அளித்தபோது சிம்பு பாடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். இது சிம்பு ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சௌந்தர்யாவை கண்டித்து இணையதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்களை சிம்பு அமைதிப்படுத்தினார்.ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் சொல்ல உரிமை இருக்கிறது. எனவே ரசிகர்கள் மற்றவர்களை இழிவுபடுத்துவதை நிறுத்தவேண்டும். என்னை எப்படி மதிக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள் என்று கூறினார்.

சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பால் சௌந்தர்யா அதிர்ச்சியானார். இதையடுத்து தான் சொன்ன கருத்துக்கு சௌந்தர்யா விளக்கம் அளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் நானும் சிம்புவும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். பாடுவதை நிறுத்தும்படி நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இது ரசிகர்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி