அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!… post thumbnail image
நியூயார்க்:-தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘ஜி77’ நாடுகளின் இருநாள் மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது.‘நலமாக வாழ உலகின் புதிய முறை’ என்ற மையக்கருவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி77 அமைப்பின் தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்க ராஜபக்சே அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் உரையாற்றவுள்ள ராஜபக்சேவுக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பான செய்திகளை திசை திருப்பும் வகையில் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுக்கு அமைதியின் பெயரால் விருது வழங்குவதா என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி