செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-கமலின் லட்சியப்படம் மருதநாயகம். அவரே இதில் கதாநாயகனாக நடித்து இயக்குவதாகவும் அறிவித்தார். தனது சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க தயாரானார். இதன் படபூஜை 1997ல் நடந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இதில் கலந்து கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு துவக்கப்பட்டது.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீர் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து படப் பிடிப்பை நடத்த முடியவில்லை. படம் நின்று போனது. மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் துவக்க கமல் பலமுறை முயன்றும் நடக்கவில்லை. அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை துவக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ஹாலிவுட் பட நிறுவனமான ‘பாக்ஸ்’ ஸ்டார் ஸ்டூடியோ’ மருதநாயகம் படத்தை எடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கமல் கூறும்போது,மருதநாயகம் பெரிய பட்ஜெட் படம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு உள்ளூரில் தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். ஆனாலும் விரைவில் இந்த படத்தை எடுப்பேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி