செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு நாளை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்!…

நாளை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்!…

நாளை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்!… post thumbnail image
சாவ் பாலோ:-20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நாளை தொடங்கி ஜூலை 13ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிக்கு பிரேசில் முழு அளவில் தயாராகி விட்டது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரேசிலும், குரோஷியாவும் (ஏ பிரிவு) சாவ் பாலோ நகரில் மோதுகின்றன.இந்திய நேரப்படி இந்த ஆட்டம் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி