2011ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 2013ல் மாண்டியா தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.அதன்பிறகு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். சக காங்கிரஸ்காரர்களே தனக்கு எதிராக தேர்தல் வேலை செய்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்தான் தற்போது இவருக்கு ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பிரபல விபாசனா தியான மையத்துக்கு சென்று பத்து நாட்கள் தங்கினார். அங்கு தொடர்ச்சியாக தியானம் செய்தார். யாரிடமும் பேசவில்லை. மவுன விரதமும் கடைபிடித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி