செய்திகள்,திரையுலகம் அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!… post thumbnail image
சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை.

குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை போன்று மற்றொரு பேண்டசி படமான இரண்டாம் உலகத்தை செல்வராகவன் இயக்கினார். ஆனால் இப்படம் மரண அடி வாங்கியது. தொடர் தோல்விகளால் துவண்டு விடாத செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை தயார் செய்து வருகிறார்.

படத்தில் நடிக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள செல்வராகவன் படத்தை அடுத்த வருடம் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதில் அநேகமாக அவருடைய தம்பி தனுஷ் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி