செய்திகள்,முதன்மை செய்திகள் கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…

கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…

கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!… post thumbnail image
கராச்சி:-பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு படையினரின் முகாமை 4 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்கியுள்ளது. முகாம் மீதான தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தின் அருகே உள்ள சோதனைச் சாவடி அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. தீவிரவாத தாக்குதல் காரணமாக கராச்சி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இதே விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 28 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி