செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அஜீத் நடிக்கும் 55வது படத்தின் கதை!…

அஜீத் நடிக்கும் 55வது படத்தின் கதை!…

அஜீத் நடிக்கும் 55வது படத்தின் கதை!… post thumbnail image
சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதை இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது. கதைப்படி சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் திரிஷா கொல்லப்படுவாராம்.

அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள் என்பதைத்தான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜீத் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பாராம். இதில் அஜீத்துக்கு உதவி செய்வது போன்று அனுஷ்காவின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை சீக்ரெட்டாக வைத்திருந்த கெளதம்மேனன், மீடியாக்களைகூட சந்திக்காமல் இருந்தார். ஆனால், அவருடன் இருந்த யாரோ ஒருவர்தான் இந்த கதையை பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டாராம். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான கெளதம்மேனன் இப்போது அந்த நபரை தனது டீமில் இருந்தே வெளியேற்றி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி