அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி!…

7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி!…

7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதும், அவரை தங்கள் நாட்டுக்கு வரும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். இதுபோன்று பூட்டான், ஜப்பான், பிரேசில், நேபாளம், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் இதுபற்றி கூறும்போது, ‘‘மத்தியில் புதிய ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.தற்போது மோடி 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது உறுதியாகி உள்ளது. இதன்படி இந்த மாதம் பூட்டான் செல்கிறார். இது பிரதமர் ஆன பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.

அடுத்த மாதம் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமர் சிங்கோ துபேயின் அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.அதே மாதம் பிரேசில் நாட்டுக்கும் செல்கிறார். அப்போது உலக கால்பந்து போட்டிகளையும் நேரில் பார்க்கிறார். செப்டம்பர் மாதம் ஆசியா– இந்தியா மற்றும் கிழக்கு நாடுகள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.நவம்பர் மாதம் ஜி.20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்கிறார். அதை தொடர்ந்து நேபாளம் செல்கிறார். அங்கு சார்க் நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.இதுதவிர மேலும் பல நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. அதுபற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி