அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு!…

புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு!…

புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-மக்களவைக்கு தேர்வு பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.யாக பதவி ஏற்றனர். மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்பு இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று 510 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் பெயர் முன்மொழியப்பட்டது. பிரதமர் மோடி முன்மொழிய, அத்வானி, சுஷ்மா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தலைவர் இருக்கையில் சுமித்ரா அமர்ந்தார்.அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமித்ரா மகாஜனுக்கு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி