சென்னை:-பிரபல இயக்குனர் சுப்ரஜித் 1971ம் ஆண்டு நடந்த வங்காள விடுதலை போர் பற்றி ஒரு டாக்குமென்டரி படத்தை இயக்கி உள்ளார். 30 நிமிடம் ஓடும் இந்த டாக்குமென்டரி படம் போரில் உயிர்நீத்த 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பற்றியது.
இதனை உள்ளாட்சித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் எல்லை பாதுகாப்பு படை தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுப்ரஜித் கூறும்போது எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டே நாளில் இசை அமைத்துக் கொடுத்தார் ரஹ்மான். இதில் போரில் சாகசங்கள் புரிந்த உயிர்நீத்த நிஜ ஹீரோக்களை பற்றிய ஒரு பாடலுக்கும் அவர் இசை அமைத்துக் கொடுத்துள்ளார். இது அவரது வந்தேமாதரம், ஜெய்கோ வரிசையில் இடம் பிடிக்கும். என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி