அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-வெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

அச்சமயத்தி்ல இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி மோடி அமெரிக்கா வருவதற்கான விசாவை அந்நாடு ரத்து செய்திருந்தது.இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

இதனையடுத்து அமெரி்க்காவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மோடி தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. அமெரி்க்க அதிபர் ஓபாமா புதிய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்திருப்பதது வெளியுறவுக் கொள்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி