செய்திகள்,திரையுலகம் மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…

மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!…

மீண்டும் நடிக்க சூர்யாவிடம் அனுமதி கேட்கும் ஜோதிகா!… post thumbnail image
சென்னை:-வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. மும்பையைச் சேர்ந்தவரான இவர் நடிகை நக்மாவின் தங்கை ஆவார்.ரஜினி, கமல், அஜீத், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டே வந்தார்.

இதற்கிடையே சூர்யாவுடன் உயிரிலே கலந்தது என்ற படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே முளை விட்ட காதல் பின்னர் படிப்படியாக பற்றி படர்ந்தது. அதன்பிறகும் காக்கா காக்க, ஜில்லென்று ஒரு காதல் உள்பட சில படங்களில நடித்த அவர்கள், ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து நடிப்புக்கு முழுக்குப்போட்டார் ஜோதிகா.இருப்பினும் பெரும் நடிகையான அவரால் வீட்டிலே சும்மாயிருக்க முடியாமல், தான் ரீ-என்ட்ரி கொடுக்க அவ்வப்போது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டு வந்தார். ஆனபோதும் பலன் கிடைக்கவில்லை.

தற்போது பாண்டிராஜ் சொன்ன ஒரு குழந்தைகள் கதை அவருக்கு மிகவும் பிடித்து விட அதில் நடிப்பதற்காக சூர்யாவிடம் கேட்டுள்ளாராம். ஆனால் அவர் இன்னும் பதில் கொடுக்கவில்லையாம்.இந்நிலையில, தற்போது சூர்யா ஓகே சொன்னால்தான் நான் நடிக்க முடியும் என்று பாண்டிராஜிடம் நிலையை ஜோதிகா சொன்னதையடுத்து, இப்போது அவர் சூர்யாவிடம் ஜோதிகாவை தனது படத்தில் நடிக்க வைக்க அனுமதி கேட்டு வருகிறார். இனிமேல் இவர்கள் இணையவே மாட்டார்கள் என்று நினைத்த சிம்பு,நயன்தாராவையே சேர்த்து படமெடுக்கும் வல்லமை கொண்டவரான பாண்டிராஜ், ஜோதிகா நடிப்பதற்கு சூர்யாவிடம் கட்டாயம் அனுமதி பெற்றுவிடுவார் என்று நம்பலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி