செய்திகள் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!…

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கியதில் 22 பேர் பலி!… post thumbnail image
பீஜிங்:-தென்மேற்கு சீனாவின் சாங்க்கியாங் சிட்டியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண அரசுக்கு சொந்தமான யான்ஷிதாய் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் விஷவாயு தாக்கியதிலே 22 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டபோது அங்கு 28 பேர் பணியில் இருந்துள்ளனர். 6 பேர் உடனடியாக தப்பித்து வெளியே வந்துள்ளனர். இவர்களில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.

காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் தொடர்ந்து நிலக்கரி சுரங்க விபத்து ஏற்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி