செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…

நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…

நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!… post thumbnail image
லண்டன்:-நிலவில் சென்று இறங்கியவுடன் சுயமாக வடிவமைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு வீட்டினை சுவீடன் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்பவர் உருவாக்கி வருகின்றார்.கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த பணியை இவர் துவக்கினார். இதற்கான நிதியுதவி பலரிடமிருந்தும் பெறப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த பணி தடைபட்டது.

ஆனால் தற்போது மீண்டும் தொடரப்பட்டுள்ள இந்த வீட்டின் உருவாக்கம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் செய்யப்பட்டுவரும் இந்த வீடானது சுவீடன் நாட்டில் காணப்படும் சிறிய காட்டேஜ் வீட்டை ஒத்திருக்கும். மூன்றுக்கு இரண்டு மீட்டர் பரப்பளவும், 2.5 மீ உயரமும் கொண்ட இந்த வீடு வளர்ந்த ஒரு மனிதன் வசிப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கும்.கார்பன் கட்டமைப்பின் மீது இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புத் துணி கொண்டு இந்த வீடு உருவாக்கப்பட்டு வருகின்றது. நிலவில் சென்று இறங்கியவுடன் வாயுவினால் இந்த கூடாரத்தை நிரப்பிய பின்னர் சில நிமிடங்களில் இந்த வீட்டின் கட்டமைப்பு சுயமாக உருவாகிவிடும்.

சுவீடன் நாட்டின் முன்னணி விண்வெளிப் பொறியாளர்கள் இந்தக் கனவினை நனவாக்க தொடர்ந்து பல ஆண்டுகளாக தங்கள் நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர். நாசாவையும் தங்களின் தொழில்முறைப் பங்குதாரர்களாகக் கொண்ட அஸ்ட்ரோபோடிக் என்ற அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த வீட்டை நிலவுக்கு எடுத்துச் செல்ல இசைந்துள்ளது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தனி நபர் நிதியில் தயாரிக்கப்படும் இந்த நிலவு வீடு வரலாற்றிலும், சர்வதேச அரங்கிலும் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் என்று அஸ்ட்ரோபோடிக் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குனரான ஜான் தோர்ன்டன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி