செய்திகள்,திரையுலகம் காமெடியில் கலக்கும் அம்மா நடிகை கலைராணி!…

காமெடியில் கலக்கும் அம்மா நடிகை கலைராணி!…

காமெடியில் கலக்கும் அம்மா நடிகை கலைராணி!… post thumbnail image
சென்னை:-சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கலைராணி சூரியுடன் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சரவெடிதான் வெடிக்கும், முதன் முறையாக அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு நல்ல நகைச்சுவை நடிகையாக கலைராணி வருவார்.என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

இத்தனை வருடங்களாக என்னை அழவைத்துதான் பார்த்தார்கள். முதன் முறையா என்னை சிரிக்க வைத்து பார்த்திருக்கிறார்கள். இயற்கையிலேயே நான் நகைச்சுவை உணர்வு உள்ளவள். சினிமாவில்கூட நகைச்சுவை காட்சிகளைத்தான் விரும்பி பார்ப்பேன். எனக்கும் ரசிகர்களை அழ வைத்து போரடித்து விட்டது. இனி சிரிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் கலைராணி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி