செய்திகள்,திரையுலகம் மரக்கன்று நட்டு 71வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!…

மரக்கன்று நட்டு 71வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!…

மரக்கன்று நட்டு 71வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா!… post thumbnail image
சென்னை:-‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர் இளையராஜா.தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

நமது நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இளையராஜா விளங்கியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர், பல்வேறு மொழிகளில் 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.

திரை இசையுலகில் யாருமே எட்ட முடியாத சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் இளையராஜாவின் 71வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடினர்.சென்னையில் இளையராஜா மரக்கன்றுகளை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 71,001 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி