செய்திகள்,திரையுலகம் தனது வாழ்க்கையை படமாக எடுக்க நடிகை நயன்தாரா எதிர்ப்பு!…

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நடிகை நயன்தாரா எதிர்ப்பு!…

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நடிகை நயன்தாரா எதிர்ப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகை நயன்தாரா 2005ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்டார். சில மாதங்களிலேயே அது முறிந்தது. அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம்வரை வந்தனர். இதற்காக மதம் மாறவும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதுவும் முறிந்து போனது. தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார்.

நயன்தாரா வாழ்க்கையை படமாக்கினால் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என கருதி புது டைரக்டர் ஒருவர் அதற்காக திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நயன்தாராவிடம் இதற்கான அனுமதி கேட்டு அணுகினார். நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி