செய்திகள் மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் தனது தோழியை பார்க்க சென்றாள். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் 15 வயது இளம் பெண்ணை கடத்தி சென்றது. பின்னர் அங்கு கேட்பாரற்று கிடந்த குடிசைக்குள் அவளை கற்பழித்தது.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பெண்ணை 38 பேர் கற்பழித்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் தோழியும் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவளிடமும் விசாரணை நடக்கிறது.இதற்கிடையே கற்பழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடும் தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும் என முஸ்லிம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி