செய்திகள்,திரையுலகம் நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…

நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!…

நடிகை நமீதா தொடங்கிய புதிய பிசினஸ்!… post thumbnail image
சென்னை:-சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியாய் இருந்த நடிகை நமீதா சினிமாவில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து, மும்பை அருகில் உள்ள லோனாவாலா என்ற மலைப்பிரசேத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப்போட்டார். நமீதாவின் காதலர் கபூரின் துணையுடன் அங்குள்ள நிலத்தில் ப்ளாட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து செமத்தியாய் லாபம் பார்த்தார்.

ஒருகட்டத்தில் அங்கு பிசினஸ் டல்லடிக்க, இன்னொரு பக்கம் கபூருக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதால், தன் கவனத்தை சென்னைப் பக்கம் திருப்பினார் நமீதா. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் பூட்டியே கிடக்கும் பழம்பெரும் பங்களாக்களை குறி வைக்கிறார் நமீதா. அதன் உரிமையாளர் யார்? அவருக்கு வீட்டை விற்கும் எண்ணம் இருக்கிறதா? என்பதை எல்லாம் லோக்கல் புரோக்கர்கள் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டு உரிமையாளரை தேடிக்கண்டுபிடிக்கிறார். பிறகு தானே நேரில் சென்று, அவர்களிடம் கோடிகளில் ஆசைக்காட்டி பிசினஸ் பேசுகிறார். இந்த புதிய பிசினசில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல கோடி சம்பாதித்துவிட்டாராம் நமீதா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி