அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…

ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…

ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!… post thumbnail image
கொச்சி:-பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச். முஸ்தப்பா வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி அவராக விலக வேண்டும் இல்லை என்றால் நீக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுலின் சகோதரி பிரியங்காவை நியமிக்க வேண்டும். ராகுல் காந்தி ஒரு ஜோக்கர் மாதிரி நடந்து கொள்கிறார் அதனால் தான் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. பிரதமர் பதவிக்கு போட்டி என்பது ஒரு சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு இல்லை.

இது மக்களுக்கு தெரியும். எனவே காங்கிரசுக்கு மக்கள் மோசமான தோல்வியை அளித்ததுள்ளனர். ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் பிரியங்கா காந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி