செய்திகள் ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!… post thumbnail image
திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது திருமணமாகும்.

அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 11 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் வாழ்க்கை நடத்த சிரமப்பட்டு கொண்டிருந்தபோது துளசிதரனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அந்த பெண்ணும் அவரது மகனும் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது 11 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் தாயார் விசாரித்தபோது தன்னை துளசிதரன் கற்பழித்து விட்டதாக கூறி கதறி அழுதாள். இதனால் பதறிப்போன அந்த பெண் மகளை சமாதானப்படுத்தி நடந்த விபரங்களை விசாரித்தபோது துளசிதரனின் கொடூர செயல்கள் வெளியானது.அந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி துளசிதரன் கற்பழித்து உள்ளார்.

இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியதால் அந்த சிறுமி பயந்து போய் தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளாள். இந்த கொடூர செயல் பற்றி வெஞ்ஞாரமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துளசிதரனை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி