செய்திகள்,திரையுலகம் நடிகர் சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!…

நடிகர் சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!…

நடிகர் சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!… post thumbnail image
சென்னை:-சந்தானமும், ராம நாராயணனும் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை எடுத்தார்கள். இது கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டது. கதை உரிமை என்னிடம் உள்ளது. என் அனுமதி இல்லாமல் படம் எடுத்தது தவறு என்று அப்போது கே.பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கே.பாக்யராஜ் கூடுதல் கமிஷனர் நமச்சிவாயத்தை சந்தித்து மீண்டும் சந்தானம் மீது புகார் மனுவை கொடுத்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-என்னுடைய இன்றுபோய் நாளை வா படத்தை காப்பி அடித்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை எடுத்தார்கள். இதுகுறித்து அப்போதே நான் புகார் கொடுத்தேன். வழக்கும் தொடர்ந்துள்ளேன். ஏற்கெனவே கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டும், நடவடிக்கையை துரிதப்படுத்துமாறும் புதிய மனு ஒன்றை கொடுத்துள்ளேன் என்றார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் பெற்றுள்ளார். அதோடு அடுத்த படத்திற்கும் கோடி கணக்கில் அட்வான்ஸ் பெற்றுள்ளார். ஆனால் பாக்யராஜ் கேட்கும் சிறிய இழப்பீட்டு தொகையை தர மறுக்கிறார். அதன் காரணமாகவே மீண்டும் இந்த பிரச்னையை தீவரமாக அவர் அணுகுகிறார் என்று பாக்யராஜ் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி