செய்திகள் மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!… post thumbnail image
குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா. இவர் திண்டுக்கல்லில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இருவரும் திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வரும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 6 மாதமாக இவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். மேலும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களில் சுற்றிவந்தனர்.கார்த்திக்ராஜா திருமணம் செய்து கொள்வதாக கூறி மரியதிலகவதியிடம் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதில் மரியதிலகவதி கர்ப்பமானார். இதுகுறித்து வெளியே சொல்ல பயந்த அவர் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்தார். தான் கர்ப்பிணியாக இருப்பதால் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சினையாகி விடும் என்றும் கதறி அழுதார்.

ஆனால் கார்த்திக் ராஜா திருமணத்திற்கு மறுத்ததுடன் ஊரை விட்டு ஓடி தலைமறைவானார். இதுகுறித்து மரியதிலகவதி வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக்ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி