செய்திகள் பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…

பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…

பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!… post thumbnail image
லாகூர்:-பாகிஸ்தானின், லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால்.இவருக்கு மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர்.ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோர்ரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் நின்று இருந்தார். அபோது அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால் அவரின் தலையில் தாக்கினர்.

அந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாக போலீஸ் அதிகாரி உமர் சீமா தெரிவித்து உள்ளார்.பெண்ணை தாக்கிய அனைவரும் தப்பியோடிவிட்டனர். அவரது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி