செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…

ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…

ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!… post thumbnail image
கொல்கத்தா:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.அதில் முதல் பிளே ஆப் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தோல்வியடையும் அணி சென்னை,மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் மீண்டும் மோத வேண்டும். அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது பஞ்சாப் அணியை விட கொல்கத்தா சற்று முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை மோதிய 13 போட்டிகளில் கொல்கத்தா ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 5 போட்டிகளில் 3-ஐ கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியிலும் கொல்கத்தா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இரு அணிகளும் சேசிங் செய்து வெற்றி பெறுவதில் திறமையான அணிகளாக நிற்கின்றன. பஞ்சாப் அணி 100 சதவிகித சேசிங் வெற்றியுடனும், கொல்கத்தா அணி தாங்கள் கடைசியாக சேசிங் செய்த 6 ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணியளவில் இப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி