அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் … post thumbnail image
புதுடெல்லி :- உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் டெல்லி, காஜியாபாத், புலந்த்சார், கான்பூர், மதுரா, போபால் ஆகிய நகரங்களின் ரெயில் நிலையங்களையும், டெல்லி காளிமாதா, துதேஷ்வர் கோவில், காஜியாபாத் ஜானகி கோவில் ஆகியவற்றையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து காஜியாபாத் ரெயில் நிலைய சூப்பிரண்டு சிவ்ஹரி மீனா கூறுகையில், “இந்த கடிதம் குறித்த தகவல் உள்ளூர் போலீசாருக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை எழுதிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உ.பி. ரெயில் நிலையங்களிலும், கோவில்களிலும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி