செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி….

தேர்தலையடுத்து மீண்டும் நடிக்கும் சிரஞ்சீவி…. post thumbnail image
தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆந்திராவில் கணிசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு சேர்ந்தது. இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புது கட்சி துவங்கினார். அதன் பிறகு அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.

காங்கிரசில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்தது அவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணுக்கு பிடிக்க வில்லை. பவன்கல்யாண் தனி கட்சி துவங்கியுள்ளார். அவருக்கு ஆந்திராவில் செல்வாக்கு பெருகியுள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி அதிர்ச்சியானார். சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் நடிக்க வருகிறார். சுதந்திர போராட்ட வீரரை மையப்படுத்தி தயாராகும் தெலுங்கு படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இது சரஞ்சீவிக்கு 150–வது படம் ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி