அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்…

மத்திய அமைச்சரவையில் எதிர்க்கட்சியாகிறது காங்கிரஸ்… post thumbnail image
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டவிதிகள்படி மொத்த எம்.பி.க்களில் 10 சதவீதம் பேர் இருந்தால்தான் அதாவது 54 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.பி.க்களே உள்ளதால் அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது என்று கூறப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற திட்டமிட்டன. ஆனால் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கே முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்க்கட்சி உரிமையை அளித்தால் பாராளுமன்றத்தில் அவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கட்சியையே எதிர்க்கட்சியாக்க விரும்புகிறார்கள்.

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர சோனியா, ராகுல் இருவரும் தயங்குகிறார்கள். எனவே எதிர்க்கட்சி இருக்கையில் கமல்நாத் அல்லது வீரப்பமொய்லி ஆகிய இருவரில் ஒருவர் அமர வைக்கப்படுவார் என்று தெரிகிறது. அ.தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் நெருக்கமாக இருக்கவே பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே பாராளுமன்றத்தில் முக்கிய பதவிகளை அந்த கட்சிகளுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி