செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்… post thumbnail image
சென்னை :- நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ நடிகர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ரஜினிகாந்துடன், ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறீர்களா?

பதில்:- நான், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்’ படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இப்போது, ‘லிங்கா’ படத்திலும் நடிக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.

கேள்வி:- கமல்ஹாசனுடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?

பதில்:- நான் ரஜினி ரசிகராக இருந்தாலும், கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் ஆசை வெகுவிரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- சந்தானம் என்னிடம் சம்பளம் பற்றி பேசுவதே இல்லை என்று சுந்தர் சி. பெருமையாக கூறியிருக்கிறாரே?

பதில்:- அது உண்மைதான். அவரிடம் மட்டுமல்ல. இன்னும் சிலரிடம் கூட, இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். சிலரிடம் வாங்காமலும் இருந்திருக்கிறேன்.

கேள்வி:- உங்களுக்கும், சிம்புவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பேசப்படுகிறதே?

பதில்:- இப்படித்தான் எனக்கும், கார்த்திக்கும் கருத்து வேறுபாடு, மோதல் என வதந்தியை பரப்பினார்கள்.

இப்போது சிம்புவுடன் தகராறு என்று வதந்தி பரப்பியிருக்கிறார்கள். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் திரைக்கு வந்ததும், சிம்பு எனக்கு வாழ்த்து சொன்னார். அவருக்கும், எனக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை.

கேள்வி:- நகைச்சுவை காட்சிகளில் மற்ற எல்லோரையும் கிண்டல் செய்கிறீர்கள். அரசியல்வாதிகளை மட்டும் கிண்டல் செய்வதில்லையே, ஏன்?

பதில்:- படத்தை ‘ரிலீஸ்’ பண்ண வேண்டாமா?

கேள்வி:- இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பீர்களா அல்லது மற்ற கதாநாயகர்களுடனும் இணைந்தும் நடிப்பீர்களா?

பதில்:- கதாநாயகனாகவும் நடிப்பேன். மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து ‘காமெடி’யும் பண்ணுவேன்.’’

இவ்வாறு நடிகர் சந்தானம் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி