செய்திகள்,திரையுலகம் கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!… post thumbnail image
சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.மே 18ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும் இந்த ஓட்டத்தில் ரஜினியின் ரசிகர்கள் பங்கெடுத்துள்ளனர்.புவியைக் காக்க மரங்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த தொடர் ஓட்டம் நடக்கிறது.

‘மரங்களை நடுவோம் இயற்கையைப் பராமரிப்போம்’ என்ற கோஷத்தை முழக்கியபடி இந்த ஓட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள்.கோச்சடையான் வரும் மே 23ம் தேதி உலகெங்கும் 6000 அரங்குகளில் வெளியாகிறது. படத்துக்கான விளம்பரம் என்பதால், இந்த பசுமைத் தொடர் ஓட்டத்தை சீரியசாக நடத்துகிறது ஈராஸ் நிறுவனம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி