அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!… post thumbnail image
சென்னை:-மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்கு புதிய விடியலை தருவீர்கள் என்று மோடியிடம் வைகோ கூறினார்.

பின்னர் பா.ஜனதா தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், பஞ்சாப் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல், வக்கீல் ராம் ஜெத்மலானி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
ராஜ்நாத்சிங் கூறும்போது,இந்த மகிழ்ச்சியான வெற்றியில் நீங்கள் தோல்வியை சந்தித்தது வருத்தமாக உள்ளது என்று வேதனையை வெளிப்படுத்தினார்.தேர்தலுக்கு முன்பே மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று நீங்கள் தொலைநோக்கு பார்வையுடன் அறிவித்தது தான் பா.ஜனதா வெற்றிக்கு காரணம் என்று வைகோ பதில் அளித்தார். பின்னர் வைகோ சென்னை திரும்பினார்.தேர்தலில் வைகோ தோல்வி அடைந்தாலும் அவரை மேல் சபை எம்.பி.யாக்க பாரதிய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டனர். பா.ஜனதா அரசு ஆளும் மாநிலத்தில் இருந்து அவரை தேர்வு செய்ய யோசனை கூறப்பட்டது.

வைகோவின் நெருங்கிய நண்பரும், பஞ்சாப் முதல் மந்திரியுமான பிரகாஷ்சிங் பாதல் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மேல் சபை எம்.பி.யாக வைகோ மறுத்து விட்டார்.இருந்தாலும் வைகோவுக்கு மத்திய அரசில் கவுரவமான பதவி வழங்க பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஏற்பட வைகோ முக்கிய காரணமாக இருந்தார். அதோடு நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று முதன் முறையாக தனது பிரசாரத்தின்போது பிரகடனப்படுத்தினார்.
இது போன்ற காரணங்களினாலும், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அங்கம்வகிக்கும் கூட்டணி அரசு ஏற்பட வேண்டும் என்ற கருத்திலும் வைகோவுக்கு ஒரு பதவி அளிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி