அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!…

உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!…

உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனது ‘டுவிட்டர்’ பக்கம் மூலம் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வகையில், ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், நேபாளம், கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் மற்றும் தலாய்லாமா ஆகியோருக்கு அவர் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்தியரஷ்யா நட்புறவு காலத்தின் சோதனைகளை கடந்து வந்துள்ளது. ரஷ்யாவுடனான நல்லுறவை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ள மோடி, குஜராத் மாநிலம் மின் உற்பத்தியில் சாதனை படைக்க ஜப்பான் நல்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்து, ‘இந்திய-ஜப்பான் நல்லுறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தனக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி ஆகியோரைப் பற்றி மோடி இதுவரை ஏதும் குறிப்பிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி