செய்திகள்,திரையுலகம் உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…

உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!…

உதயநிதியிடமிருந்து விலகிய எஸ்.ஆர்.பிரபாகரன்!… post thumbnail image
சென்னை:-உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இதனால் அடுத்த படத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நூற்றுக் கணக்கில் கதை கேட்டு கடைசியாக சுந்தரபாண்டியன் ஹிட் கொடுத்துவிட்டு காத்திருந்த எஸ்.ஆர்.பிரபாகரனை கூப்பிட்ட தனக்காக கதை ரெடி பண்ணச் சொன்னார்.

பிரபாகரனும் அவசரகதியில் உதயநிதிக்காக பண்ணிய கதை ‘இது கதிர்வேலன் காதல்’. உதயநிதியின் கணக்குகள் பொய்யாகி கதிர்வேலனுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. இருந்தாலும் பிரபாகரனை வைத்து அடுத்த ஒரு படம் பண்ணலாம் என்று அதற்கு கதையை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு, ‘நண்பேண்டா’ வில் நடிக்க போய்விட்டார். உதயநிதிக்காக நான்கைந்து கதைகள் ரெடி பண்ணிக் கொடுத்தும் அது எதுவும் உதயநிதிக்கு திருப்தி தரவில்லை.

இதனால் வெறுத்துப்போன பிரபாரகன் உதயநிதியின் கதை இலாகாவிலிருந்து வெளியேறினார். உதயநிதிக்காக உருவாக்கிய கதையை வேறொரு நடிகரை வைத்து இயக்க இருக்கிறார். அனேகமாக அது ஜீவாவாக இருக்கலாம் என்கிறார்கள். அதனை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி