செய்திகள்,திரையுலகம் மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத் குமார்!…

மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத் குமார்!…

மீண்டும் வில்லனாக நடிக்கும் சரத் குமார்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சரத்குமார் ஹீரோ, வில்லன் என டபுள் ரோலில் சண்டமாருதம் என்ற படத்தில் நடிக்கிறார். ஏய், மகாபிரபு படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். அவர் கூறும்போது, சுனாமி, புயல் போன்றவற்றின் வேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்பார்கள்.

தனது வழியில் எவ்வளவு பெரிய தடை வந்தாலும் அதை உடைக்கும் ஆற்றல் படைத்தது இக்காற்று. ஹீரோவாக ஒரு வேடம், எதிரியை எரித்துத் தான் பழக்கம் என்ற அழுத்தமான வில்லன் வேடம் என 2 கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சரத். மேலும் படத்தின் கதையையும் அவர் எழுதி இருக்கிறார்.

ராதிகா, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க ராதாரவி, இமான் அண்ணாச்சி, விஜயகுமார், அருண்சாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேஜிக் பிரேம்ஸ் சரத், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கின்றனர். ராஜேஷ்குமார் திரைக்கதை. ஜேம்ஸ் வசந்தன் இசை. இம்மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி