செய்திகள்,திரையுலகம் ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்கும் கானா பாலா!…

ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்கும் கானா பாலா!…

ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்கும் கானா பாலா!… post thumbnail image
சென்னை:-சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடி பிரபலமானவர் கானா உலகநாதன்.அவரது வரவுக்குப்பிறகு பட்டி தொட்டிகளில் பாடிக்கொண்டிருந்த கிராமிய பாடகர், பாடகிகள் அனைவரும் கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர்.

அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி பாடலை பாடிய கானா பாலா உள்ளிட்ட பலர் தற்போது தொடர்ந்து சினிமாவில் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் கானா பாலா, அட்டகத்தியில் இரண்டு பாடல்களை பாடி பிரபலமானவர்.அதையடுத்து காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமும் ஆடியிருந்தார்.அதையடுத்து இப்போது பல படங்களில் தானே பாட்டெழுதி, பாடி, நடனமாடவும் தொடங்கியிருக்கிறார்.

ஆனால், முன்பெல்லாம் ஒரு பாடல் பாடுவதற்கு நாற்பது ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். இப்போதோ ஒரு லட்சம் கொடுங்கள். நானே பாடுவதோடு நடனமாடியும் விடுகிறேன் என்கிறாராம். கானா பாலாவின் இந்த திடீர் கெடுபிடியினால் சில இயக்குனர்கள் அவரை தவிர்த்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி