செய்திகள்,திரையுலகம் விருந்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கம்!…

விருந்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கம்!…

விருந்தில் சிம்பு, நயன்தாரா நெருக்கம்!… post thumbnail image
சென்னை:-சென்னையில் சமீபத்தில் நடந்த நடிகை திரிஷாவின் பிறந்தநாள் விருந்து நிழ்ச்சியில் நயன்தாரா,அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் விருந்துக்கு வந்து இருந்தனர். சிம்புவும் வந்தார்.நயன்தாராவும், சிம்புவும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். விருந்தும் சாப்பிட்டார்கள்.

2006ல் வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவுடன் நயன்தாரா நெருக்கமானார். இவருவரும் திருமணம் வரை வந்தனர்.
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரபுதேவாவை மணப்பதற்காகவே இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இதுவும் கடைசி நேரத்தில் முறிந்தது. தற்போது நயன்தாரா தனியாகவே இருக்கிறார்.

இதற்கிடையில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்து போனது. சிம்புவும் தனியாக இருக்கிறார்.டைரக்டர் பாண்டிராஜ் தனது ‘இது நம்மஆளு’ படத்தில் இருவரையும் மீண்டும் ஜோடியாக்கினார். அப்போதுதான் இருவருக்கும் பழைய நட்பு துளிர்ந்தது.படப்பிடிப்பில் நெருக்கமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இப்போது விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்க துவங்கியுள்ளனர். இது திருமணம் வரை போகலாம் என படஉலகினர் கிசுகிசுக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி